மன்னை முத்துக்குமார்.
முகப்பு
முகப்பு
என்னைப் பற்றி
தொடர்புக்கு
Showing posts with label
மன்னையின் கவிதைகள்
.
Show all posts
Showing posts with label
மன்னையின் கவிதைகள்
.
Show all posts
ஆற்று மீன்
எதை எதிர்பார்த்து
எதை எதிர்கொள்ள
இத்தனை பிரயாசப்படுகிறது
எதிர் நீச்சல் போடும்
ஆற்று மீன் ?
*
-மன்னை முத்துக்குமார்.
வியாபாரி !
பொருள் இருக்கும்
எடைத் தட்டை தாழ்த்தி
விலையில் சரி செய்து விடுகிறார் ..
வியாபாரி !
*
~~ மன்னை முத்துக்குமார்.
வீட்டுச்சுவர்
குழந்தைகளின்
கிறுக்கல்களுக்காக
வெள்ளையடிக்கப்படாத
வீட்டுச்சுவர் சொல்லும்
தந்தையின் பாசத்தை !
*
~~ மன்னை முத்துக்குமார்.~~
சீக்கிரம் முளைத்துவிடு ...
ஆஸ்துமாவில்
அல்லல்படும் அம்மாவையும்
ஆக்ஸிடெண்டில்
காலிழந்த அப்பாவையும்
ஆறாம் வகுப்பு படிக்கும்
தங்கையையும்
காப்பாற்றுவதென் ஊதியம்
தானென்று
சொன்னாலும் நம்பமாட்டார்
குழந்தை தொழிலாளர் என்று
சீர்திருத்த பள்ளிக்கு
அனுப்பிவிட்டால் ..
சீக்கிரம்
முளைத்துவிடு
மீசையே..!
*
~~ மன்னை முத்துக்குமார். ~~
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)