சர்வாதிகாரியின் தபால் தலை.

ஒரு சர்வாதிகாரி தன் பிறந்த நாளில் தன் படத்தைக் கொண்ட தபால் தலைகளை ஏராளமாக வெளியிட்டார்.

ஆனால் அந்த தபால் தலைகள் அதிகம் விற்பனை ஆகவில்லை.தன செயலரை அழைத்து காரணம் கேட்டார்.

செயலர் சொன்னார்,”அந்த தபால் தலைகள் சரியாக ஒட்டவில்லை. அதனால்தான் சரியான விற்பனை இல்லை,

” சர்வாதிகாரிக்குக் கோபம் வந்தது. தபால் நிர்வாகியை அழைத்து,” ஒழுங்காகக் கோந்து பூசப்பட்டிருந்தால் ஓட்டுவதில் சிரமம் இருக்காதே? ஏன் அதை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை?” என்று கேட்டார்.

நிர்வாகி சொன்னார், “ கோந்து சரியாகத்தான் பூசப்பட்டிருக்கிறது. ஆனால் எச்சில் உமிழ்ந்தவர்கள் கோந்து இருந்த பக்கத்தில் உமிழவில்லை.”
--
.
 ( இந்த பதிவு இந்த வார ( 20-02-2013)  குமுதம் இதழில் , அரசு கேள்வி பதிலில் வெளிவந்துள்ளது. குமுதம் இதழாசிரியருக்கு நன்றி. )

No comments:

Post a Comment