ஆராதனா


ஆராதனா
சமத்துவக் கல்வி பயில்கிறாள்
“செட்டிநாடு” வித்யாஸ்ரமத்தில்..!
*
----
 குருத்தொட்டுச் செடிக்கு
காய்க்கும் திறன் அதிகம் என்ற கோவிந்தன் தான்
சாதி மறுப்பு திருமணம் செய்த தன் மகளை
கெளரவத்துக்காய் கொன்று தீர்த்தான் !
*.
கரிசனம் !
ஓட்டுப்பெட்டியில் பொத்தானை அழுத்தும் வரை
அணையாமல் இருந்தது மின்சாரம் ..!
*
 பதில் தெரிந்த கேள்விகளை
ஒருபோதும் குழந்தைகள் கேட்பதில்லை !
*
~~ மன்னை முத்துக்குமார்.

No comments:

Post a Comment