திருவாய்ச்செடிக்குளத்தில்


கபடி
கோலி
கிரிக்கெட்
எல்லாம்
என்னோடு தான்
விளையாடினான்;
கணீர் குரல்
கரகரக்கும் வயது
அவனாகவே தான் விலகினான்
மெல்ல மெல்ல
அவள்களோடு நூறாங்குச்சியும்
தாயமும் பிடித்துப்போனதவனுக்கு
நாலுமூல அத்தாச்சியும்
அவன் ப்ரியமானது
கூடப் பெரிதாகப்படவில்ல,
திருவாய்ச்செடிக்குளத்தில்
 
தனியே குளிக்கையில் மாராப்பு
கட்டிக்கொண்டவனை
பார்த்தமாத்திரம் தான் புரிந்தது
அவன் மூணாம் பாலினம் ஆகிப்போனது
பதற்றத்தில் அவன்/ள்
அம்மாவிடம் சொல்லப்போனால்
விம்மி அழுதவள்
வெளில சொல்லிடாதே 
எனக்கும் தெரியுமென்கிறாள் !
*

No comments:

Post a Comment